கூட்டாக வழிபடுவோருக்கு அகம் மகிழ்ந்து அருள்பவர் ஐயப்பன். பூத கணங்களின் தலைவரான இவரை தர்ம சாஸ்தா, பூதநாதர், ஐயனார் என்னும் பெயர்களிலும் வழிபடுவர். சென்னை நங்கநல்லுõர் மணிகண்ட சபா சார்பில் ஐயப்ப சுவாமிக்கு வெங்கடராம குருசுவாமி தலைமையில் 60 ஆண்டுகளாக ஆராதனை நடந்து வருகிறது. நங்கநல்லுõர் உத்தர குருவாயூரப்பன் கோயிலின் நாராயண ப்ரவசன மண்டபத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உலக நலனுக்காக, இங்கு கடந்த நவ.29 முதல் தொடங்கிய லட்சார்ச்சனை டிச.21 வரை நடக்கிறது. தினமும் காலை 6.00 முதல் 7.00 வரை வேத பாராயணம், 7.00 11.00 வரையும், மாலை 6.00 7.00 வரையும் கோடி அர்ச்சனை, இரவு 7.00 8.30 வரை பஜனையும் இடம்பெறும். கோடி அர்ச்சனையை ஒட்டி சிறப்பு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் செய்ய விரும்புவோர் 89398 91161, 89398 91162 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.