இலங்கை மன்னன் ராவணனால் சீதை கவர்ந்து செல்லப்பட்டாள். சீதையை மீட்க ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடலைக் கடந்து செல்வதற்காக, ராமர் ராமநாதபுரம் அருகிலுள்ள திருப்புல்லாணியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். அதன் அடிப்படையில் திருப்புல்லாணி ஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் ராமருக்கு சந்நிதி உள்ளது. திருப்புல்லாணி ராமர் மீது பக்தி கொண்ட சேதுபதி மன்னர், ராமநாதபுரத்திலும் ராமருக்கு கோயில் அமைக்க முடிவெடுத்தார். இதன் அடிப்படையில் எழுந்ததே கோதண்டராமர் கோயில். கருவறையில் சீதை,லட்சுமணர், அனுமனுடன் ராமர் கையில் வில்லேந்திய நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஜெயவீர ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், சிவனுக்கு சந்நிதிகள் உள்ளன. விமானத்தில் விஷ்ணுவின் தசாவதார நிகழ்ச்சிகளை விளக்கும் சுதை சிற்பங்கள் உள்ளன. மூலவர் சந்நிதி பின்புறம் ராமர் பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,(மதுரை ரோடு) துõரத்தில் கோயில் உள்ளது.