மார்கழி அமாவாசையும், மூலநட்சத்திரமும் கூடிய நாளில் ஆஞ்சநேயர் அவதரித்தார். இந்நாளில் விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலையில் நீராடி விரதமிருந்து மதியம் மட்டும் ஒருவேளை உணவு உட்கொள்ள வேண்டும். மாலையில் கோயிலில்ஆஞ்சநேயருக்கு துளசிமாலை அணிவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். காலை உணவைத் தவிர்க்க முடியாதவர்கள் பால், பழம் சாப்பிடலாம். பகல் முழுவதும் ‘ஸ்ரீராமஜெயம்’ மந்திரத்தை ஜெபிப்பது நல்லது. ராமநாமம் எழுதுபவர்கள் 108 அல்லது 1008 முறை எழுதவும் செய்யலாம். பூஜையறையில் விளக்கேற்றி, ஆஞ்சநேயர் படத்துக்கு வடைமாலை சாத்தி, அவல், பொரி, கல்கண்டு படைத்து வழிபடவேண்டும். ஆஞ்சநேயர் கவசம், சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும். அனுமன் ஜெயந்தி விரதம் மேற்கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர்.