பதிவு செய்த நாள்
12
டிச
2018
11:12
பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில், வருடாபிஷேகத்தை முன்னிட்டு, கும்ப கலசங்கள் வைத்து, யாகபூஜையும், கைலாசநாதர், அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பழநி கிழக்குரதவீதி பெரியநாயகியம்மன் கோயிலில் கடந்த 2017ல் நவ.,24ல் கும்பாபிஷேகம் நடந்தது. இதன் ஓராண்டு நிறைவு வருடாபிஷேகவிழா நேற்று நடந்தது. கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜை நடந்தது. கும்பகலசங்கள் ஊர்வலமாக வெளிப்பிரகாரத்தை வலம் வந்தது. பின்னர் கைலாசநாதர், பெரியநாயகியம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி,தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, பால், தயிர், பன்னீர், பழங்கள் உள்ளிட்ட 16வகை பொருட்களில் சிறப்புஅபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 7:00மணிக்கு கைலாசநாதர், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் ரவீதியில் புறப்பாடு நடந்தது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உபயதாரர் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, கண்காணிப்பாளர் முருகேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.