அழகர்கோவில்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.சஷ்டி மண்டபத்தில் தானியங்கள் விரிக்கப்பட்டு அதன் மீது 1008 சங்குகள் ஓம் வடிவில் வைக்கப்பட்டிருந்தன. அருகில் கும்ப கலசங்கள் வைக்கப்பட்டு வேதமந்திரங்கள் முழங்க உலக நன்மைக்காக யாக பூஜைகள் நடந்தன. உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மூலவர் சர்வ அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.