அலங்காநல்லுார்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் டிச., 18 சொர்க்க வாசல் திறப்பு விழா நடக்கிறது. இக்கோயிலில் டிச., 8 முதல் பகல்பத்து, ராபத்து உற்ஸவம் தினமும் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு டிச.,18 அதிகாலை 5:00 முதல் காலை 6:00 மணிக்குள் நடக்கிறது. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் சொர்க்கவாசல் வழியாக வந்து, சயன மண்டபத்தில் எழுந்தருள்வார்.இக்கோயிலின் துணை கோயிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில், அதே நாளில் அதே நேரம் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.
உசிலம்பட்டி: சிந்துபட்டி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு டிச., 18 காலை 6:30 மணிக்கு நடக்கிறது.