திருநள்ளார் கோவில் யானை புத்துணர்ச்சி முகாமில் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2018 01:12
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் யானை ப்ரக்குருதி, தேக்கம்பட்டியில் நடக்கும் புத்துணர்ச்சி முகாமில் பங்கேற்க, புறப்பட்டுச் சென்றது.தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை புத்துணர்வு முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. இந்த முகாமில், திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் யானை ப்ரக்குருதியும் பங்கேற்று வருகிறது.இந்தாண்டு கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் நடைபெறும் புத்துணர்வு முகாமில் பங்கேற்க, திருநள்ளார் கோவில் யானை ப்ரக்குருதி, நேற்று புறப்பட்டது. வழியனுப்பு நிகழ்ச்சியில், கோவில் அதிகாரிகள் முன்னிலையில் சிவாச்சார்யார்கள் யானைக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து, பிரசாதம் மற்றும் பழங்கள் வழங்கினர். பின்னர், லாரியில் ஏற்றி, முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.