பழநி: பழநி முருகன் கோயில் கிழக்கு ரதவீதியில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் நவ.,27ல் மூலவர் கோபுர கலசத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். பழநி அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில் அழகு நாச்சியம்மன் கோயிலில் செல்வ சுப்ரமணியன் குருக்கள் குழுவினர் மூலம் சிறப்பு பூஜைகளுடன் புதிய செப்புக் கலசத்திற்கு பூஜைகள் செய்து மூலவர் கோபுரத்தில் பிரதிஷ்டை செய்தனர். இந்நிகழ்ச்சியில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், மேலாளர் உமா, கண்காணிப்பாளர் முருகேசன் பங்கேற்றனர். இன்று மாலை அம்மனுக்கு அபிேஷக ஆராதனைகள் நடக்கிறது. நாளை காலை 6:00மணிக்கு கோபுரக்கலசத்திற்கு கும்பகலச புனிநீர்ஊற்றி வருடாபிேஷகவிழா நடக்க உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.