பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ‘ரோப்கார்’ மாதாந்திர பராமரிப்பு பணிக்காக, இன்று (டிச.,14ல்) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக சென்று வரும் வகையில் நாள்தோறும் ‘ரோப்கார்’ இயக்கப்படுகிறது. இது மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று மட்டும் நிறுத்தப்படுகிறது. கம்பிவடம், உருளைகள், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவர். பின்ஒவ்வொரு பெட்டியிலும் குறிப்பிட்ட அளவு எடைக்கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ‘ரோப்கார்’, நாளை (டிச.,15) முதல் வழக்கம்போல இயக்கப்படும் என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.