மரகத நடராஜர் கோயிலில் டிச.,22ல் சந்தனக்காப்பு களைதல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2018 01:12
உத்தரகோசமங்கை:ராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் மரகத நடராஜர் சிலையில் சந்தனக் காப்பு களைதல் டிச.,22 காலை 9:30 மணிக்கும், அடுத்த நாள் காலை 5:30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. நேற்று இரவு 7:15 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில், பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த மரகத நடராஜரின் சிலையில் பூசப்பட்ட சந்தனம் களையப்படும்.சந்தனக்காப்பு களையப்பட்ட மரகத நடராஜரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த ஆண்டு டிச.,22 காலை 9:30 மணிக்கு சந்தனக்காப்பு களையும் நிகழ்ச்சி நடக்கிறது.காலை 11:00 மணி முதல் மரகத நடராஜருக்கு 21 வகையான அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். அன்று காலை 9:30 முதல் பக்தர்கள் பச்சை மரகத நடராஜரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் நடக்கிறது. மறுநாள் காலை 4:00 மணிக்கு புதிய சந்தனக் காப்பிடுதலும், சர்வ அலங்காரமும் நடைபெறும். 5:30 மணிக்கு மகா தீபாராதனையும், அருகே உள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தருளும் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.