பதிவு செய்த நாள்
16
டிச
2018
02:12
திருவண்ணாமலை:மார்கழி மாத பிறப்பை யொட்டி, அருணாசலேஸ்வரர் கோவில் நடை திறப்பு நேரம், மாற்றப்பட்டுள்ளது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், 10 நாட்கள், மாணிக்கவாசகர் உற்சவம் நடப்பது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன் துவங்கிய, மாணிக்கவாசகர் உற்சவம், 23ம் தேதி வரை நடக்கிறது.இதை முன்னிட்டு, மாணிக்கவாசகர், மாட வீதியில் வலம் வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படும்.இந்நிலையில், மார்கழி மாத பிறப்பையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று காலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. வரும், 18ம் தேதி, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அருணாசலேஸ்வரர் கோவிலில், காலை, 4:00 மணி முதல், 5:00 மணிக்குள், வேணுகோபால் சுவாமி மற்றும் ஜெகலட்சுமி அம்மனுக்கு அபிஷேகமும், வைகுந்த வாயில் திறப்பும் நடக்க உள்ளது.