பதிவு செய்த நாள்
16
டிச
2018
02:12
சபரிமலை:சென்னையைச் சேர்ந்த, மனிதி பெண்கள்அமைப்பு, 60 இளம் பெண்களுடன் சபரிமலை வர இருப்பதால், பாதுகாப்பு வழங்கும்படி, கேரள முதல்வருக்கு,இ -- மெயில் அனுப்பிஉள்ளது. அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் என்ற உத்தரவை தொடர்ந்து பிரச்னைகள் ஏற்பட்டு, மண்டல சீசனில்பக்தர்கள் கூட்டம் குறைந்துள்ளது.
சென்னையில் உள்ள மனிதி என்ற அமைப்பைச் சேர்ந்த செல்வி, கேரள முதல்வருக்கு, இ -- மெயில் அனுப்பி உள்ளார்.அதில் கூறியிருப்பது:எங்கள் அமைப்பில், 200-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். பெண்களின் உரிமையை நிலைநாட்ட, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி உள்ளோம்.வரும், 23-ம் தேதி, தமிழகத்தில் இருந்து, 15 பேர் உட்பட, 60 இளம் பெண்கள் சபரிமலைக்கு வர உள்ளோம்; எங்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது. இந்த தகவல்,டி.ஜி.பி.,-க்கு அனுப்பப்பட்டு, சபரிமலைக்குபெண்கள் வந்தால் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.