சேலம்: சேலம், கோட்டை பெருமாள் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அங்கு, பெயர் வெளியிட விரும்பாத நன்கொடையாளர் ஒருவர், நேற்று, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அணையா விளக்கை, கோவிலுக்கு வழங்கினார். இது, மூலவர் அழகிரிநாதர் சுவாமி அருகே வைக்கப்படவுள்ளது. இன்று முதல், அணையாவிளக்கு மூலம், தீபம் ஏற்றப்பட உள்ளதாக, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.