புதுச்சேரி: பட்டானூரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில், 108 பால் குட அபிஷேகம் நடந்தது. புதுச்சேரி-திண்டிவனம் புறவழிச்சாலை பட்டானூர் கிராமத்தில், 6 அடி உயர பழமையான கருட கருங்கல்லால் ஆன சாய்பாபா உருவச்சிலை, வழிகாட்டும் சாய்பாபா என்ற பெயரில் பிரிதிஷ்டை செய்யப்பட்டது.
சிலை பிரதிஷ்டை செய்து 108வது நாளான நேற்று (டிசம்., 16ல்), பால்அபிஷேகம் நடந்தது. அதையொட்டி, காலை 7:00 மணிக்கு பால்குட ஊர்வலம் நடந்தது. அதை தொடர்ந்து, வழிகாட்டும் சாய்பாபாவிற்கு, 108 பால்குட அபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.