பதிவு செய்த நாள்
17
டிச
2018
12:12
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று (டிசம்., 17ல்) துவங்குகிறது.பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா இன்று துவங்குகிறது. விழாவையொட்டி, இன்று (டிசம்., 17ல்) மூலவருக்கு முத்தங்கி சேவை அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன .தொடர்ந்து, உற்சவ மூர்த்திக்கு மோகினி அலங்காரம் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கிறது.
நாளை (டிசம்., 18ல்) காலை 4:00 மணிக்கு மேல் 5:00 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.பொள்ளாச்சி பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று (டிசம்., 17ல்), இரவு விஷ்ணு கான பஜனையும்; நாளை(டிசம்., 18ல்) அதிகாலை, 4:00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாராயணம், காலை, 5:00 மணிக்கு வைகுண்ட வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் வகையில், 13 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி கோவில் வளாகத்தில் நேற்று (டிசம்., 16ல்) துவங்கியது. லட்டு தயாரிப்பு பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.