பதிவு செய்த நாள்
17
டிச
2018
03:12
ஈரோடு: கோவை, ஆனைகட்டி, திருமுறை திருக்காவணம் சிவனடியார் திருக்கூட்டம், திருமுறை சேவை மையம் சார்பில், பன்னிரு திருமுறை முற்றோதுதல் பெருவிழா, ஈரோடு ஆயிர நகர வைசியர் திருமண அரங்கில் நேற்று (டிசம்., 16ல்) நடந்தது. அரிகரதேசிக ஓதுவார் மூர்த்திகள் தலைமை வகித்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஓதுவார்கள், பன்னிரு திருமுறை பாடல்களை பாடி விளக்கமளித்தனர். ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
*கிருஷ்ணகிரி: மார்கழி மாத பிறப்பையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி, கிருஷ்ணகிரி புதுப்பேட்டை வடக்கு மாட வீதி நவநீத வேணுகோபால் சுவாமி கோவிலில், காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. இதேபோல், காந்திசாலை வேணுகோபால்சுவாமி, பழைய பேட்டை லட்சுமி நாராயணசுவாமி, காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், சென்னை சாலை பெரியமாரியம் மன் கோவிலில், காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.