பதிவு செய்த நாள்
17
டிச
2018
04:12
பழநி : பழநி பாத யாத்திரை பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட பாதை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.பழநி பாத யாத்திரை உலகப்புகழ் பெற்ற பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, மார்கழியில் மாலை அணிந்த முருகபக்தர்கள் சென்னை, மதுரை, சிவகங்கை, தேனி, விருது நகர், திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர்.திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். ஒட்டன்சத்திரம்-- முதல் பழநி வரை பாதயாத்திரை பக்தர்களுக்காக தனியாக அமைக்கப்பட்ட பாதை பல இடங்களில் சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. ஆறு அடி அகலம் கொண்ட இப்பாதை ஆங்காங்கே புதர்மண்டி செடி,கொடிகள் வளர்ந்து வெறும் இரண்டு அடியாக குறுகிவிட்டது.
இதனால் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.மேலும் பழநி--உடுமலை ரோட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணி ஆமைவேகத்தில் நடக்கிறது. பொங்கல் அன்று தைப்பூச விழா துவங்கிய சிலநாட்களில் பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு பாத யாத்திரை பக்தர்கள் வசதிக்காக செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, மூலசத்திரம் உள்ளிட்ட இடங்களில் சேதமடைந்த ரோடு மற்றும் பாதயாத்திரை நடைபாதையை செப்பனிட வேண்டும்.--