பதிவு செய்த நாள்
18
டிச
2018
10:12
கடந்த மாதத்தை விட நன்மை அதிகம் கிடைக்க வாய்ப்புண்டு. சூரியன் இந்த மாதம் தனுசுவிற்கு சென்று நன்மை தருவார். மேலும் சுக்கிரன் ஜன.1ல் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு மாறினாலும் நன்மை தருவார். புதன் டிச.29க்கு பிறகு தனுசு ராசிக்கு வந்து நற்பலன் கொடுப்பார். உங்கள் ராசிக்கு 5ல் உள்ள குரு மற்றும் 6ல் உள்ள சனியால் உங்களுக்கு நற்பலன் தொடர்ந்து கிடைக்கும்.
குருவால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். செல்வாக்குக்கு எந்த குறையும் வராது. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். சுக்கிரனால் ஜன.1க்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி உயர்வு மேம்படும். டிச.25,26ல் பெண்கள் மிக ஆதரவுடன் இருப்பர். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். டிச.20,21,22ல் உறவினர் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். அதே நேரம் டிச.31, ஜன.1ல் உறவினர் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். டிச.29,30ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். புதனால் டிச.29க்கு பிறகு கணவன், மனைவி இடையே இருந்த பிரச்னை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். எடுத்த முயற்சி வெற்றியடையும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி குறித்த பேச்சு நடக்கும். பணியாளர்களுக்கு சூரியனால் பணியிடத்தில் மதிப்பு உயரும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் டிச.29 வரை அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதன்பின் புதனால் நல்ல முன்னேற்றம் காணலாம். முயற்சியில் தடைகள் விலகும். உங்கள் திறமையால் நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். சிலர் புதிய பதவி கிடைக்கப் பெறுவர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்றுசேருவர். டிச.18,19, ஜன.14ல் நல்ல பலனை எதிர்நோக்கலாம்.
வியாபாரிகளுக்கு எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். பகைவர்கள் பிரச்னையில் இருந்து விடுபட்டு வியாபாரத்தில் முழுகவனம் செலுத்தலாம். டிச.29க்கு பிறகு புதனால் நல்ல லாபம் கிடைக்கப் பெறலாம். கடந்த காலத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். ஜன.1க்கு பிறகு ஆன்மிகம் சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஜன.5,6ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதிக வருமானம் இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பாடுபட வேண்டியதிருக்கும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்படைவர். ஆசிரியர்களின் ஆலோசனை வளர்ச்சிக்கு துணைநிற்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு பெறுவர். விண்ணப்பித்த கல்விக்கடன், உதவித்தொகை கிடைக்கும். டிச.29க்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் போட்டிகளில் வெற்றி காணலாம். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை பெறுவர். மானாவாரி பயிர்கள், மஞ்சள், கரும்பு, எள் மூலம் லாபத்தைக் காணலாம். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருவாய் இருக்காது. பெண்கள் உறவினர்களின் மத்தியில் நற்பெயர் காண்பர். பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். டிச.29க்கு பிறகு நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும். வேலையில் உங்கள் திறமை பளிச்சிடும். அதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு புதனால் லாபத்துக்கு குறைவிருக்காது. ஜன.1க்கு பிறகு குடும்பத்தோடு புனித தலங்களுக்கு செல்ல வாய்ப்புண்டு. ஜன.7,8,9 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும்.
* நல்ல நாள்: டிச.18, 19, 20, 21, 22, 25, 26, 29, 30 ஜன.5, 6, 7, 8, 9, 14
* கவன நாள்: ஜன.10,11 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 5, 9 நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்:
● வெள்ளியன்று நாகதேவதைக்கு நெய் தீபம்
● செவ்வாயன்று முருகனுக்கு பாலபிஷேகம்
● தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்