பதிவு செய்த நாள்
18
டிச
2018
01:12
வீரபாண்டி: அழகிரிநாதர் கோவில், சென்றாயபெருமாள் கோவில்களில் இன்று (டிச.,18) வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. சேலம் உத்தமசோழபுரம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, கடந்த, 8 முதல், பகல்பத்து உற்சவம் துவங்கியது. நிறைவு நாளான நேற்று, அழகிரிநாதர் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசி திருவிழாவின், முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு இன்று காலை, 5:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் பத்து நாட்கள் நடக்கிறது. இதேபோல், காளிப்பட்டி சென்றாயபெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவையொட்டி, இன்று சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. காலை, 4:30 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, திருக்கோடி ஏற்றப்பட்டு, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.