மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ராவத்தநல்லுார் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் தெப்ப உற்சவ விழா நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் மார்கழி முதல் நாள் முன்னிட்டு சுவாமிக்கு மகா திருமஞ்சன பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு ஆஞ்நேயருக்கு வடை, வெற்றிலை, பழம், காய்கறிகள் மற்றும் பணம் மாலை அணிவித்து தீபாராதனை காண்பித்தனர். பின்னர் ராமர், சீதை, லட்சுமணன் சுவாமி சிலைகளை எடுத்து சென்று அருகில் உள்ள குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது.