பதிவு செய்த நாள்
19
டிச
2018
11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று திறக்கப்பட்ட சொர்க்கவாசல், வரும், 27 வரை திறந்திருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பகல்பத்து, ராப்பத்து நிகழ்வுகளுடன், 21 நாட்களுக்கு, வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது. பகல் பத்து நிகழ்ச்சி முடிந்து, ராப்பத்து தொடங்கும் நாளான நேற்று காலை, பரமபத வாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. காலை, 5:30 மணி முதல், இரவு, 10:00 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருந்தது. ராப்பத்தில், இரண்டாம் நாளான இன்று முதல், 10ம் நாளான வரும், 27 வரை, குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் பக்தர்களின் சேவைக்காக பரமபத வாசல் திறக்கப்பட்டிருக்கும் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.