பதிவு செய்த நாள்
19
டிச
2018
11:12
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நேற்று காலை சொர்க்கவாசல் மண்டபத்தில் ஆழ்வார்கள் எழுந்தருளினர். தொடர்ந்து 6:20 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா முழங்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெரியபெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் தம்பதி சமேதராக எழுந்தருளினர். ஆழ்வார்கள் எதிர்கொண்டு அழைத்து வர மாடவீதிகள் வழியாக ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தவ.ஆழ்வார்கள் மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பத்தி உலாவுதல், அரையர் வியாக்யானம், சேவாகாலம், தீர்த்தகோஷ்டி நடந்தது. மாலை 3:30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் ஆஸ்தானம் வந்தடைந்தனர்.அமைச்சர் கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.,சந்திரபிரபா, தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோ பங்கேற்றனர்.