பதிவு செய்த நாள்
19
டிச
2018
11:12
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் உட்பட பல்வேறு கோவில்களில், சொர்க்க வாசல் திறப்பு வழிபாடு நடந்தது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைணவ கோவில்களில் மட்டும் நடக்கும், சொர்க்க வாசல் திறப்பு விழா, சிவனுக்கு உரிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று நடந்தது. இக்கோவில் வளாகத்தில் உள்ள வேணுகோபால் சுவாமி சன்னிதியில், காலை, 3:00 மணிக்கு, நடை திறக்கப்பட்டு, வேணுகோபால் சுவாமி, கஜலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.வேணுகோபால் சன்னிதியில் பெரிய மடக்கில் தீபம் ஏற்றப்பட்டு, அதை சிவாச்சாரியார்கள், கையில் ஏந்தியவாறு எடுத்து சென்று, சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.