பதிவு செய்த நாள்
19
டிச
2018
12:12
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.திருவள்ளூர் அடுத்த பூங்கா நகர், சிவ-விஷ்ணு கோவிலில் ஜலநாராயணி தாயார் சமேத ஜலநாராயண பெருமாளுக்கு, வைகுண்ட ஏகாதசி விழா நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, கருட வாகனத்தில், ்ரீதேவி பூ தேவி சமேத சீனிவாச பெருமாள் காட்சியளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பினர்.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணியளவில், உற்சவர் வீரராகவர், பூதேவி, ்ரீதேவி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதே போல், சத்தியமூர்த்தி தெருவில், பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில், பூங்கா நகர் என்.ஜி.ஓ., காலனி சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட, அனைத்து பெருமாள் கோவில்களிலும், சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசி ஓட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு திருத்தணி, டிச.19- வைகுண்ட ஏகாதசி ஓட்டி அனைத்து பெருமாள் கோவில்களில் அதிகாலையில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணிமுருகன் கோவிலின் துணை கோவிலான நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள விஜயராகவ பெருமாள் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி ஓட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை முதல் பக்தர்கள் மாலை, 6:00 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிப்பட்டனர். சில பெண்கள் நெய் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர்.அதே போல் திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள லட்சுமிநரசிம்மா சுவாமி, நெமிலி வைகுண்ட பெருமாள், நல்லாட்டூர் வீரமங்கள ஆஞ்சநேயர், கொல்லகுப்பம் வெங்கடேஸ்வர பெருமாள், திருத்தணி பலிஜா கல்யாண மண்டபம் எதிரில் அமைந்த பஜனை கோவில் உள்ள திருத்தணி தாலுகாவில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று வைகுண்ட ஏகாதசி ஓட்டி சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர். கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.