Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம்: (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3) ... தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் –1) பட்டாலும் பார்வையால் தப்பிக்கலாம் தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் –1) ...
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்நீச்சல் போடுங்க! முன்னேறிச் செல்லுங்க!!
எழுத்தின் அளவு:
விருச்சிகம்:  (விசாகம் 4, அனுஷம், கேட்டை) எதிர்நீச்சல் போடுங்க! முன்னேறிச் செல்லுங்க!!

பதிவு செய்த நாள்

22 டிச
2018
02:12

பரபரப்பும் சுறுசுறுப்புமாக பணிபுரியும் விருச்சிக ராசி அன்பர்களே!

கேது சாதகமாக இருக்கும் சூழ்நிலையில் இந்த புத்தாண்டு பிறக்கிறது. மனதில் பக்தி உயர்வு மேம்படும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். குருபகவான் தற்போது உங்கள் ராசியில் இருப்பது சுமாரான நிலையே. ஆனாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளன. அவர் மார்ச்13ல் இருந்து மே19 வரை அதிசாரம் பெற்று தனுசு ராசிக்குச் செல்கிறார். இது சிறப்பான நிலை. அப்போது உங்களது ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். குடும்பத்தினரின் தேவையனைத்தும் நிறைவேறும்.  பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.

சனிபகவான் குடும்பத்தில் பிரச்னைகளை உருவாக்குவார். சிலருக்கு வீண்செலவும் ஏற்படலாம். ஆனால் சனிபகவானின் 10ம் இடத்துப்பார்வை சிறப்பாக  உள்ளதால் ஓரளவு நன்மையை எதிர்பார்க்கலாம். ஏப்.26 முதல் செப்.13 வரை அவர் வக்கிரம் அடைந்தாலும் தனுசு ராசிக்குள்ளேயே இருக்கிறார். வக்கிரத்தில் சிக்கும் கிரகத்தால் சிறப்பாக செயல்பட முடியாது என்பதால் கெடுபலன்  குறையும். மொத்தத்தில் இந்த ஆண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் கூடுதல் நன்மையைக் காணலாம். கேதுபலத்தால் நல்ல பணப்புழக்கம் இருக்கும். எடுத்த முயற்சிகள் சிறப்பாக முடியும். மக்கள் மத்தியில் செல்வாக்கு மேம்படும்.
மதிப்பு, மரியாதை கூடும். மே19 முதல் அக்.26 வரை விவாதங்களில் ஈடுபடாமல் சற்று ஒதுங்கியிருக்கவும். எதையும் விடாமுயற்சியால் மட்டுமே முடிக்க வேண்டியதிருக்கும். வீண்செலவும் அதிகரிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் பணவரவில் பாதிப்பு இருக்காது.

குடும்பத்தினருடன் புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர் வகையில் வாக்குவாதம் தவிர்ப்பது அவசியம். மார்ச் 13 முதல் மே 19 வரை மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அன்பு மேம்படும்.
ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாங்கலாம். சிலர் வசதியான வீட்டிற்கு குடியேறவும் வாய்ப்புண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். அதுவும் நல்ல வரனாக அமையும். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். அவர்கள் வருகையால் நன்மை கிடைக்கும். மே 19 முதல்  அக்டோபர் 26 வரை சுபநிகழ்ச்சிகள்  தடைபடலாம். தம்பதியிடையே கருத்து வேறுபாடு வரலாம்.  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சி நடத்திடும் சூழல் உருவாகும்.

பணியாளர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.  இருப்பினும் குருவின் பார்வையால் வழக்கமான சம்பள உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை பிப்.13க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். மார்ச்13 முதல் மே19 வரை சிறப்பான முன்னேற்றம் காணலாம்.
வேலைப்பளு குறையும். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வேலைப்பார்த்துக் கொண்டே பக்கத்தொழில் செய்பவர்கள் கூடுதல் வருமானம் காணலாம். மே 19ல் இருந்து அக்.26 வரை வேலையில் அலைச்சலும், பளுவும் இருக்கும். வேலையில் வெறுப்புணர்ச்சி கூட ஏற்படலாம். எதிர்பார்த்த கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம்.

தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். லாபம் படிப்படியாக அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். மார்ச் 13 முதல் மே19 வரை இரும்பு, கம்ப்யூட்டர், அச்சுத்தொழில், இயந்திரம் தொடர்பான தொழில்கள் வளர்ச்சி பெறும். அரசிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிரி தொல்லை  மறையும். புதிய வியாபாரம் தற்போது தொடங்க வேண்டாம். அப்படியே தொடங்கினாலும் குடும்பத்தினர் பெயரில் தொடங்கவும். வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு அறிந்து நிறைவேற்றுவது நன்மையளிக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைக்கவும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஊர் திரும்புவர்.

கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். மார்ச் 13க்கு பிறகு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசிடம் இருந்து விருது, பாராட்டு கிடைக்கும்.  அரசியல்வாதிகள் சுமாரான நிலையில் இருப்பர். ஆனால் பணப்புழக்கத்திற்கு  குறைவிருக்காது. விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல பொருளாதார வசதியுடன் காணப்படுவர். புதிய பதவியும் தேடி வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

மாணவர்கள் இந்த ஆண்டு படிப்பில் அக்கறை கொள்வது நல்லது. விரும்பிய பாடம் கிடைக்க விடாமுயற்சி தேவைப்படும்.  இருப்பினும் குருவின் பார்வையால் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். மார்ச்13ல் இருந்து மே19 வரை போட்டி, பந்தயத்தில் ஈடுபட்டு வெற்றி காண்பர். நல்லவர் நட்பு மற்றும் ஆசிரியர் அறிவுரை உங்களை உயர்த்தும். விரும்பிய பாடம் கிடைக்கும்.  நவம்பர்,டிசம்பர் மாதங்களில் நற்பெயர் கிடைக்கும்.

விவசாயிகள் நல்ல வளர்ச்சி காண்பர். நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்புண்டு. சிலர் நவீன முறையில் விவசாயம் செய்து கூடுதல் லாபம் காண்பர். மே 19 முதல் அக்.26 வரை எதிலும் கூடுதல் முதலீடு போட வேண்டாம். வழக்கு, விவகாரத்தில் முடிவு சாதகமாக அமையும்.  இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.

பெண்கள் குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். குருவின் பார்வையால் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
பொருளாதார வளம் பெருகும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் நல்ல வருமானம் காண்பர்.  மார்ச்13 முதல் மே 19 வரை ஆடை, ஆபரணம் வாங்குவர். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வரும். உடல்நலம் சிறப்பாக இருக்கும்.

பரிகாரம்:

*  வெள்ளியன்று துர்க்கைக்கு எலுமிச்சை தீபம்
*  சனியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை
*  வியாழனன்று தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை

பாடுங்க! பாடுங்க

அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar