திருப்பரங்குன்றத்தில் எண்ணெய் காப்பு திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25டிச 2018 12:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா நேற்று துவங்கியது.
கோயிலில் உற்ஸவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டத்தை மூன்று முறை வலம் வந்து திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சார்யார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்பட்டது. அம்மனின் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசிமூலம் பல் துலக்குதல், மையிட்டு கண்ணாடி பார்த்த நிகழ்ச்சிகள் முடிந்துதீபாராதனை நடந்தது. டிச., 28 வரை இந்நிகழ்ச்சிகள் நடக்கும். அன்று பல்லக்கில் தெய்வானை அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து அருள்பாலிப்பார். விழா நடக்கும் ஐந்து நாட்களும் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும்.