வால்பாறை: வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவில் திருவிழாவில், பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து வழிபட்டனர்.வால்பாறை வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 59ம் ஆண்டு திருவிழா கடந்த, 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில், நேற்று மதியம், 12:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 3:00 மணிக்கு ராஜீவ்காந்தி நகர் மாரியம்மன் கோவிலிலிருந்து, ஐயப்ப பக்தர்கள் பாலக்கொம்பு எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலுக்கு சென்றனர்.மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.