தனுஷ்கோடி ராமர் கோவிலில் கழிவுகளால் பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2019 03:01
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலைச் சுற்றி குப்பை, கழிவுகள் தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். கோவிலுக்கு முன் வணிகம் மற்றும் இளநீர் கடைகள், ஐஸ் கிரீம் தள்ளு வண்டிகள் ஆக்கிரமித்துள்ளதால், பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. கடைகளில் தேங்கும் இளநீர் கழிவுகூடு, ஐஸ் கிரீம் கவர், பிளாஸ்டிக் பைகளை கோவிலுக்கு முன் காலி இடத்தில் கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துகின்றனர். மேலும் இங்கு கழிப்பறை இல்லாதால், கழிவுகள் கொட்டி கிடக்கும் இடத்தில் பக்தர்கள் சிறுநீர் கழிப்பதால் துர்நாற்றம் வீசுகிறது.