பதிவு செய்த நாள்
12
ஜன
2019
12:01
காஞ்சிபுரம்: வரதராஜப் பெருமாள் கோவிலில், போகி பண்டிகை அன்று, ஆண்டாள் - பெருமாள் திருக்கல்யாணம் உற்வசம் நடைபெறுகிறது.காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், மார்கழி மாதத்தில், 10 நாட்கள் ஆண்டாள் உற்சவம் நடைபெறும்.தொடர்ந்து, போகி பண்டிகை அன்று, காலையில், தங்கப் பல்லக்கில் ஆண்டாள் எழுந்தருளி, மாட வீதி புறப்பாடு நடைபெறுகிறது.மாலையில், கோவில் வளாகத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில், மாலை மாற்றுதல் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும். மறு நாள் பொங்கல் அன்று, மாலையில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள் ஊர் வலம் நடைபெறுகிறது.வரும், 16ம் தேதி, பழையசீவரம் மலையில், பொது மக்கள் தரிசிக்க அருள்பாலிப்பார். பின், திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் எழுந்தருள்வார்.அன்று இரவு, அங்கிருந்து புறப்பட்டு, ஏரிவாய், அஞ்சூர், தேனம்பாக்கம் வழியாக சென்று, 17ம் தேதி மதியம், வரதர் கோவிலை பெருமாள் சென்றடைவார். இந்த உற்சவத்தை முன்னிட்டு, பெருமாளுக்கு, வழியெங்கும் மண்டகப்படி நடைபெறும்.