கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருப்பதி திருமலை சீனிவாசப்பெருமாள் கோவிலின் மகா கும்பாபிஷேகம் ஜனவரி மாதம் 27 ந்தேதி காலை 7:30 மணியில் இருந்து 9 மணிக்குள் நடைபெற உள்ளது. இதற்காக யாகம் 23 ந்தேதி துவங்குகிறது. திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பெருமாள் கோவிலைத் திறந்துவருகிறது. அதன் ஒரு கட்டமாக கன்னியாகுமரியில் கடந்த பல ஆண்டுகளாக இந்தப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு வந்தது.