சம்பா கோதுமை – 100 கிராம் சர்க்கரை – 200 கிராம் முந்திரிபருப்பு – 8 நெய் – 8 டீஸ்பூன் குங்குமப்பூ – 2 மிளகளவு
எப்படி செய்வது
காலையில் கோதுமையை 4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கோதுமையைக் களைந்து அரைத்து 400 மி.லி., தண்ணீர் சேர்த்து வடிகட்டித் தெளிய வைக்கவும். குங்குமப்பூவைச் சிறிது பாலில் ஊற வைக்கவும். வாணலியில் சிறிது நெய் விட்டுக் காய்ந்த பின் முந்திரிப் பருப்பை வறுத்து விட்டு, 50 மி.லி., தண்ணீர் விட்டு சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைக்கவும். முதிர்பாகு ஆனபின் கோதுமை வண்டலை (அரைத்த கோதுமை அடியில் இருப்பது வண்டல்) பாத்திரத்தில் பிடிக்காமல் கிளற வேண்டும். தாம்பாளத்தில் சிறிது நெய் தடவி வைக்கவும். நெய், குங்குமப்பூ, முந்திரிப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து அல்வா பாத்திரத்தில் ஒட்டாமல் நீர்ப்பசை முற்றிலும் வற்றிக் கெட்டியானபின் தாம்பாளத்தில் கொட்டிச் சமமாய்ச் செய்து, சூடு ஆறியபின் துண்டுகளாக எடுத்தால் கோதுமைப் பால் அல்வா ரெடி.