பசு வளர்ப்போர் கறவை காலத்தில் புல், புண்ணாக்கு, தவிடு என சரியான நேரத்தில் உணவு அளிப்பர். கறவை நின்றதும் உணவளிக்காமல் விட்டு விடுவர். இதனால் பாவம் உண்டாகும் என்று சாஸ்திரம் கூறுகிறது. சமையலில் ஈடுபடும் பெண்களால் பசுவைப் பாதுகாக்க முடியும். காய்கறிகளில் இருந்து கிடைக்கும் தோல், வேண்டாத கழிவுகளை பசு வளர்ப்போரிடம் ஒப்படைக்கலாம். இதனைச் சேகரிக்கும் பணியில் சமூகசேவை நிறுவனங்கள் ஈடுபட்டால் இருவருக்குமே பலன் எளிதில் கிடைக்கும்.