Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இந்த வாரம் என்ன? கிரீடம் யாருக்கு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காலம் பொன் போன்றது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2019
12:01

ஆசிரியரான ஜோசப்பின் மகன் பீட்டர்.  காலம் நேரம் பார்க்காமல் தூங்குவான்; ஊர் சுற்றுவான். வகுப்பில்  பின்தங்கிய மாணவனாக இருந்தான்.
ஒருநாள் அவனிடம், “ஒரு கேம் விளையாடுவோமா? என்றார் ஜோசப். “கண்டிப்பாக அப்பா. என்ன கேம் சொல்லுங்க?” என்றான் ஆவலாக. “தினமும் உன் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய் வரவு வைப்பேன். அதை நீ செலவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு நிபந்தனை” என்றார். “சொல்லுங்க அப்பா” “அந்தந்த நாளே செலவு செய்யாத பணம் கணக்கிலிருந்து எடுக்கப்படும். பணத்தை வேறு யாருக்கும் மாற்ற முடியாது. அதை செலவளிக்க உனக்கு மட்டுமே உரிமை உண்டு. எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்படும். மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது.” என்றார். “நோ பிராப்ளம் அப்பா. எனக்கு பிடித்தது எல்லாம் வாங்கி மகிழ்வேன். நண்பர்களுக்கும் வாங்கித் தருவேன். பணத்தை வீணாக்க மாட்டேன்.” என்றான் பீட்டர். “உண்மையில் இது விளையாட்டு இல்லை பீட்டர். நிதர்சனமான உண்மை. நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான ஒரு வங்கிக் கணக்கு இருக்கிறது. அதை நாம் பொருட்படுத்துவதில்லை. அதன் பெயர் தான் காலம்” என்றார் ஜோசப். “என்ன அப்பா சொல்கிறீர்கள்?”  “நாள்தோறும் உன் கணக்கில் 24மணி நேரம் அதாவது 86,400 வினாடிகள் வரவு வைக்கப்படுகிறது. இரவு தூங்கப் போகும் போது நீ பயன்படுத்தாத நேரத்தை உன்னால் சேமித்து வைக்க முடியாது. ஒவ்வொரு நாளும் வீணாக்கிய காலம் ஒருபோதும் மீண்டும் கிடைக்காது” என்றார். பணத்தை விட மதிப்பு மிக்கது காலம் என்பதை உணர்ந்த பீட்டர் திருந்தினான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் பஞ்சபூதம் அல்லது பிரபஞ்சம் என்கிறோம். பிரபஞ்சம் என்றால் ... மேலும்
 
கண்ணப்ப நாயனார் சிவனுக்கு கண்கொடுத்த தலம் காளஹஸ்தி. இங்குள்ள சுவாமி காளத்திநாதர். இவரது கண்ணில் ... மேலும்
 
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைந்தனர். நாணாக (கயிறாக) இருந்த வாசுகியால் ... மேலும்
 
விநாயகர், முருகன், அம்பிகை, பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் சிவபூஜை செய்து அருள் பெற்றுள்ளனர். ... மேலும்
 
‘பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா’ என்று சிவனைப் பாடினார் சுந்தரர். சுந்தரரின் முதல் பாடல் இது தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar