ப.வேலூர்: ப.வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், தை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும் நடந்தது.
கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், ப.வேலூர் பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் தை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.