பதிவு செய்த நாள்
17
ஜன
2019
05:01
பிரயாக்ராஜ்: உத்தர பிரதேச மாநிலத்தில், பிரசித்தி பெற்ற, கும்பமேளாவின் முதல் நாளில், ஏராளமான திருநங்கையர் புனித நீராடினர்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, பிரயாக்ராஜ் எனப்படும் அலஹாபாதில், ஆறு ஆண்டுக்கு ஒருமுறை, அர்த்த கும்பமேளா நடைபெறுகிறது. நேற்று முன்தினம் துவங்கிய அர்த்த கும்பமேளாவில், ஏராளமான ஹிந்து சாதுக்கள் புனித நீராடினர். இந்த ஆண்டு, கும்பமேளாவில் புனித நீராட, முதல் முறையாக, திருநங்கையருக்கு அனுமதி வழங்கப்பட்டது.கின்னாரா அகாரா அமைப்பைச் சேர்ந்த, லட்சுமி நாராயண் திரிபாதி, 40, தலைமையில் திருநங்கையர், காவி மற்றும் சிவப்பு சேலையணிந்து, பக்தியுடன், பஜனை பாடல்களை பாடியபடி, திரிவேணி சங்கமத்தில், புனித நீராடினர்.தமிழில் அறிவிப்பு: கும்பமேளாவில் பங்கேற்க வரும், ஹிந்தி பேசாத மக்கள் வசதிக்காக, ரயில் சேவை குறித்த தகவல்களை, ஆங்கிலம், குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் மலையாளம் என, ஆறு மொழிகளில் அறிவிக்க, ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.