பதிவு செய்த நாள்
19
ஜன
2019
11:01
உடுமலை:உடுமலை வழியாக பழநி கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தர்ம ரக்ஷண ஸமிதி சார்பில் அன்னதானம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கேரளா மாநிலம் மற்றும் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதிகளிலிருந்து, பழநி முருகன் கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.
பாதயாத்திரை வரும் பக்தர்கள் வசதிக்காக, உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில், தர்ம ரக்ஷண ஸமிதி சார்பில், அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு 14 கழிப்பறை, குளியல் அறை தயார் செய்யப்பட்டுள்ளது. பாதயாத்திரை வரும் பக்தர்கள் கால் வலி நீக்கும் வகையில், ஸ்ரீ பரஞ்சோதி இயற்கை நல மருத்துவமனை சார்பில், மூலிகை எண்ணெய் மூலம், பாதசிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர் திவ்யா தலைமையில், 10 பேர் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகிகள் கூறுகையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக, கழிப்பறை, குளியல் அறை வசதிகள், இயற்கை முறையில் மசாஜ் சேவை , மருத்துவ முகாம் மற்றும் மூன்று நேரமும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், ஓய்வு எடுத்துச்செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வரும், 22ம் தேதி வரை இம்மையம் செயல்படும், என்றனர்.