பதிவு செய்த நாள்
20
ஜன
2019
12:01
பழநி: பாதயாத்திரைக்கு புகழ் பெற்ற பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, காரைக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாடங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவண்ணம் உள்ளனர்.
வழக்கத்தை விட கிரிவீதிகள், யானைப்பாதை, படிப்பாதைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இடும்பன் குளம், சண்முகநதியில் ஏராளமான பக்தர்கள் நீராடினர். வெளியூர் பக்தர்கள், ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் 2 மணிநேரம் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். மலைக்கோயில் வெளிப்பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியிருந்தால், நீண்ட நேரம் காத்திருந்து, மூலவர் தண்டபாணி சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்துவருகின்றனர்.