பதிவு செய்த நாள்
21
ஜன
2019
11:01
வடலூர்: தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்தியஞான சபையில் 7 திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. ஜோதி தரிசனத்தை காண சத்தியஞான சபையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
கடலுார் மாவட்டம், வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 148வது தைப்பூச ஜோதி தரிசன விழா, நேற்று துவங்கியது. காலை, 7:30 மணிக்கு, தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதுார், வள்ளலார் தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஆகிய இடங்களில், அந்தந்த கிராம மக்கள் சார்பில், சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.ஏழு திரைகள்பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில், பழங்கள் மற்றும் சீர் வரிசை, ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கொடி பாடல் பாடி, ஞானசபையில் காலை, 10:00 மணியளவில், சன்மார்க்க கொடியேற்றப்பட்டு, தைப்பூச ஜோதி தரிசன விழா துவங்கியது.முக்கிய நிகழ்வான தைப்பூச ஜோதி தரிசன விழா நிகழ்ச்சியில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.