பதிவு செய்த நாள்
21
ஜன
2019
12:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், பவுர்ணமிதோறும், லட்சக்கணக்கான பக்தர்கள், 14 கி.மீ., நடந்து, கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்வர்.தை மாத பவுர்ணமி திதி, நேற்று மதியம், 1:52 மணிக்கு துவங்கி, இன்று, 21ம் தேதி, காலை, 11:41 மணி வரை உள்ளது. இதனால், நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்தனர். தை மாத பவுர்ணமி என்பதால், பக்தர்களின் வருகை, கூடுதலாக இருந்தது.