தை மாதம், பவுர்ணமியுடன் கூடிய பூச நட்சத்திர நாளில் முருகப்பெருமான் கோயில்களில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அசுரர்களை அழித்து, தேவர்களைக் காக்க முருகப் பெருமானுக்கு அன்னை பராசக்தி வேல் வழங்கிய நாள் தைப்பூசம். எனவே, தைப் பூசத்தன்று முருகப்பெருமானை வணங்கினால் எதிரிகள் தொல்லை ஒழியும். தைப்பூசத் தன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் அறிவாற்றல் வளரும் என்பது ஐதீகம்.