உலகிலேயே மிக புண்ணியத் தலமாகப் போற்றப்படும் இந்த இடத்திற்கு குருக்ஷேத்திரம் என்ற பெயர் எப்படி வந்தது? கவுரவர், பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவர் குரு மகாராஜா, இவர் இந்த இடத்தில் தவம், அன்பு, சுத்தம், தானம், சத்தியம், பிரம்மச்சரியம், தயை, தர்மம் போன்ற எட்டுவித குணங்களும் தழைக்க விரும்பி, அதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள விரும்பினார். பகவான் விஷ்ணுவும் இது கேட்டு மகிழ்ந்து ஆசிர்வாதம் அளித்தார். அத்துடன் இந்த இடம் குருமஹாராஜ் என்ற பெயரில் குருக்ஷேத்திரம் என விளங்கும் எனவும், புண்ணியதலமான இங்கு யாராவது இறந்தால் அவர்கள் மோட்சத்திற்குச் செல்வார்கள் எனவும் இரு வரங்கள் அளித்தார். சரஸ்வதி நதிக்கும், த்ரிஷ்ஷவல் என்ற நதிக்கும் இடையில் உள்ள இத்தலம் உத்தரவெடி, பிரம்மவாடி, தர்மக்ஷேத்திரம் என்றெல்லாம் அழைக்கப்பட்டு, தற்பொழுது குருக்ஷேத்திரம் என்று விளங்குகிறது.