திருவனந்தபுரம், சபரிமலை தேவசம்போர்டுக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என அதன் தலைவர் பத்மகுமார் கூறினார்.திருவனந்தபுரத்தில் அவர் கூறியதாவது:சபரிமலையில் வருமானம் கணிசமாககுறைந்துள்ளது. குத்தகைதாரர்கள் பணம் செலுத்தாவிட்டால் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்படும்.
தேவசம்போர்டுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சம்பளம், கட்டுமானம், சிறிய கோயில்களில் பூஜை போன்றவை கூட பாதிக்கும். தினசரி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்படும். இதனால் அடுத்த பட்ஜெட்டில் தேவசம்போர்டுக்கு அரசு அதிக நிதி ஒதுக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கூறினார்.தேவசம்போர்டு திண்டாடும் போது, கேரள அரசு போக்குவரத்துக்கழகம் கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு அதிக வருமானம் ஈட்டியுள்ளது.மண்டலகாலம், மகர விளக்கு பூஜையின் போது மொத்த வருமானம் 45.20 கோடி ரூபாய். கடந்த ஆண்டு இது 15.20 கோடி ரூபாயாக இருந்தது. நிலக்கல்-- பம்பை பஸ் சேவையில் மட்டும் 31.20 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.தொலைதுார பஸ்கள் மூலம் 14 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் தனியார் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டும் அனுமதிக்கப்பட்டன. இதனால் அனைத்து பக்தர்களும் பம்பைக்கு அரசு பஸ்சில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.