பதிவு செய்த நாள்
24
ஜன
2019
12:01
சென்னிமலை: சென்னிமலை, தைப்பூச தேரோட்டம், நகரில் நான்கு ரத வீதிகளையும் வலம் கொண்டு வரப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, நிலை நிறுத்தப்பட்டது. நேற்றிரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சியும், இன்றிரவு, தெப்போற்சவம் பூத வாகனக்காட்சியும் நடக்கிறது. மகா தரிசனம், நாளை காலை, 10:00 மணிக்கு, வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு, சிறப்பு மகா அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து இரவு, 7:40 மணிக்கு, நடராஜ பெருமானும், சுப்பிரமணிய சுவாமியும், வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. திங்கட்கிழமை அதிகாலை, 5:00 மணி வரை, ஸ்வாமி திருவீதி உலா நடக்கும்.