பதிவு செய்த நாள்
06
பிப்
2019
02:02
கரூர்: கரூர் சின்னதாராபுரம் அருகே, சூடாமணி, மாசாணியம்மன் கோவில் மாசிமக பூக்குழி திருவிழா, தொடங்கியது. அம்மனுக்கு கங்கணம் கட்டப்பட்டு, கொடியேற்றுதலுடன் தொடங்கிய இவ்விழாவில், கம்பம் நடப்பட்டு அருகே முளைப்பாரி இடப்பட்டுள்ளது.
தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்து, மாலையில் வழிபாடு நடைபெறுகிறது. சக்தி கரகம் பாலிக்கப்பட்டு வாணவேடிக்கையுடன், ஆனைமலையில் இருந்து, தீர்த்தம் கொண்டு வந்து, மாசாணியம்மனுக்கு பல்வேறு பூஜை, வழிபாடு நடக்க உள்ளது.
வரும், 19ல், அம்மனுக்கு ஆபரணங்கள் கொண்டு வந்து, பூக்குழி குண்டம் ஸ்தாபிக்கப் படுகிறது. மறுநாள், எல்லைமேட்டில் இருந்து அக்னி கரகம், சக்தி அலகு குத்தி, அக்னிச் சட்டி எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வருவர். தொடர்ந்து பூக்குழி இறங்கும்
நிகழ்ச்சி நடக்கிறது.