ஈரோடு: ஈரோடு, கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், லட்சார்ச்சனை விழா, வரும், 20ல் நடக்கிறது. கோவை, நாராயணன் சுவாமி மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் நடத்தி வைக்கின்றனர்.
குடும்பத்துடன் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள், கட்டணம் செலுத்தி, பெயரை பதிவு செய்து கொள்ள, கோவில் செயல் அலுவலர் கங்காதரன், வேண்டுகோள் விடுத்துள்ளார்.