பதிவு செய்த நாள்
11
பிப்
2019
02:02
செங்கல்பட்டு:சிங்கபெருமாள்கோவில், பாடலாத்ரி நரசிம்மா பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்திற்கு வாசக்கால், நேற்று (பிப்., 10ல்)அமைத்தனர்.செங்கல்பட்டு அடுத்த, சிங்கபெருமாள் கோவில் கிராமத்தில், பாடலாத்ரி நரசிம்மா பெருமாள் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இக்கோவிலில், ராஜகோபுர திருப்பணிகள், சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தற்போது, சில மாதங்களாக, மேற்கண்ட கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுடன், ராஜகோபுரத்திற்கு 64 வஸ்த்துக்கள் அடங்கிய பெட்டகத்துடன், வாசக்கால், நேற்று (பிப்., 10ல்), அமைத்தனர். இதில், கோவில் செயல் அலுவலர், திருக்கோவில், பணியாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.