பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
ஆர்.கே.பேட்டை: வரும் அமாவாசை சிவராத்திரியாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விரதத்தை நேர்த்தியாக அனுசரிக்க, சிவனடியார்கள் காத்திருக்கின்றனர். சிவனுக்கு படைக்க தேவையானவற்றை சேகரிப்பதிலும், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.மாசி மாதம் அமாவாசை திதி, சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில், இரவு பகலாக, சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஓதுவார்களும், சிவனடியார்களும் விடிய விடிய சிவ பூஜை நடத்துகின்றனர்.அதேபோல், வீடுகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
இந்த வழிபாட்டில், கொள்ளு, காராமணி, கொண்டைக்கடலை உள்ளிட்ட பயறு வகைகள்,
பிரதான இடம் பிடிக்கும் என்பது சிறப்பு.இதை கருத்தில் கொண்டு, ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதி விவசாயிகள், காராமணி, கொள்ளு, பட்டாணி உள்ளிட்ட பயறு வகைகளை பயிரிட்டுள்ளனர்.தற்போது, அவற்றின் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
அறுவடை செய்யப்படும் கொள்ளு செடிகளில் இருந்து, கொள்ளு பிரித்தெடுக்கப்பட்டு வருகிறது.