பதிவு செய்த நாள்
12
பிப்
2019
12:02
துன்பம் கண்டு துவளாத துலாம் ராசி நேயர்களே!
இந்த மாதம் சுக்கிரன், குரு, சனி, கேது மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார்கள். பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பாக இருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆற்றல் மேம்படும்.
ராகு 9ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடமல்ல. அவரால் முயற்சியில் தடை உருவாகலாம். கேது 3ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் இறையருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். உடல் உபாதைகளை குணமாக்குவார்.
குருபகவான் மார்ச்13ல் அதிசாரம் பெற்று தனுசு ராசிக்கு செல்வதால் முயற்சியில் தடை ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது பார்வைகள் சாதகமாக உள்ளன. எந்த இடையூறுகள் வந்தாலும் முறியடித்து வெற்றிக்கு வழிகாண்பீர்கள். சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்.
குடும்பத்தில் தெய்வ அனுகூலம் உண்டாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். புதிய வீடு, மனை வாகனம் வாங்க யோகம் வரும். சுக்கிரனால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். பிப்.25க்கு பிறகு மதிப்பு, மரியாதை உயரும். உறவினர்களிடம் சுமுகநிலை ஏற்படும். பிப்.24,25ல் பெண்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விருந்து, விழா என செல்வீர்கள். பிப்.19,20,21ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். மார்ச் 3,4ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு வரலாம்.
பணியாளர்கள் அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியதிருக்கும். சுக்கிரனால் வளர்ச்சி காண்பீர்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு சிலர் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரியும் நிலை வரலாம். பிப்.17,18ல் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு பகைவர் தொல்லை இருக்கும். ஆனாலும் விடாமுயற்சியால் எதையும் அனுகூலமாக்குவர். குருவால் பண வரவு கூடும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படும். பிப்.25க்கு பிறகு பணப்புழக்கம் இருக்கும். மார்ச் 8,9ல் சந்திரனால் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்கள் நண்பர்களால் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிப்.25க்கு பிறகு அரசு வகையில் இருந்து புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிறப்பான பலன் பெறலாம். மார்ச் 5,6,7ல் சிலர் மன உளைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் குருவால் சிறப்பான நிலை அடைவர். பாடத்தில் மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளிலும் வெற்றி காண்பர். மார்ச் 13க்கு பிறகு குருபார்வையால் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்களில் சீரான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.
பெண்கள் குடும்பத்தாரின் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ப கவுரவம் கிடைக்கும். புதிய பதவி தேடி வரும். மார்ச் 13க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். பிப்.28, மார்ச் 1,2ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். மார்ச் 10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் ஆதரவு கிடைக்கும். செவ்வாயால் உடல்நிலை அதிருப்தியளிக்கலாம். மருத்துவரின் உதவி தேவைப்படும்.
* நல்ல நாள்: பிப்.17,18,19,20,21,24,25,28 மார்ச் 1,2,8,9,10,11.
* கவன நாள்: பிப். 13,14 மார்ச் 12,13,14
* அதிர்ஷ்ட எண்:4,8
* நிறம்: வெள்ளை, சிவப்பு
* பரிகாரம்:
* தினமும் காலையில் நீராடி சூரியநமஸ்காரம்
* தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் தரிசனம்
* வெள்ளியன்று ராகுகாலத்தில் நாகர் வழிபாடு