பதிவு செய்த நாள்
12
பிப்
2019
12:02
உண்மையின் இருப்பிடமாகத் திகழும் மீன ராசி நேயர்களே!
குருபகவான் மாதம் முழுவதும் நற்பலன் தருவார். சுக்கிரன் பிப்.25ல் சாதகமான இடத்துக்கு வந்து நன்மை தருவார். மற்ற கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் தீமை ஏற்படாது. சந்திரன் பெரும்பாலான நாட்கள் நன்மை தருவார். ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு.
கேது 10-ம் இடமான தனுசு ராசியில் இருப்பதால் எதிரி தொல்லை ஏற்படும். உடல் உபாதை வரலாம். ராகு 4-ம் இடமான மிதுன ராசியில் இருப்பதால் அலைச்சல், குழப்பம் உருவாகலாம்.
குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிப்.25க்கு பிறகு வருமானம் உயரும். மார்ச் 3,4ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் பிப்.15,16ல் அவர்களுடன் கருத்துவேறுபாடு வரலாம். மார்ச் 12,13,14ல் புத்தாடை,அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பிப்.8,9ல் சகோதரிகள் ஆதரவுடன் இருப்பர்.
பணியாளர்கள் சீரான நிலையில் இருப்பர். குருவால் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.
சூரியனால் இடமாற்றத்தைக் காணலாம். பிப்.28, மார்ச்1,2 ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்புண்டு. முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செவ்வாயால் அரசுப்பணியாளர்கள் வேலையில் கூடுதல் அக்கறையுடன் இருக்கவும். வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொல்லை வரலாம். சுக்கிரன், குரு சாதகபலனால் பணவரவு அதிகமாகும்.
மார்ச் 5,6,7,10,11ல் சந்திரனால் தடைகள் வரலாம். பிப்.19,20,21ல் எதிர்பாராத வகையில் பணம் வரும். பகைவரை எதிர்த்து வெல்லும் ஆற்றல் இருக்கும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு,
செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மார்ச்13க்கு பிறகு குருபார்வையால் பகைவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்களுக்கு பிப்.25க்கு பிறகு தடைகள் அகலும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் மூலம் உயர்ந்த அந்தஸ்தைப் பெறலாம். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். பிப்.17,18ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால் கல்வி வளர்ச்சி உண்டாகும். வெளிநாட்டில் படிப்பவர்களுக்கு கூடுதலாக பணம் விரயமாகலாம். ஆசிரியர்களின் அறிவுரை பயனுள்ளதாக இருக்கும். மார்ச் 13க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் போதிய மகசூலைப் பெறுவர். மஞ்சள், நெல் போன்றவற்றின் மூலம் எதிர்பார்த்ததை விட மகசூல் அதிகரிக்கும். கால்நடை மூலம் வருமானம் உயரும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனம் வேண்டாம்.
பெண்களால் குடும்பம் உயர்ந்த நிலையை அடையும். மார்ச் 8,9ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பர். மார்ச் 13க்கு பிறகு குடும்ப முன்னேற்றத்திற்காக பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும். குருவால் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். செவ்வாய் அக்கம் பக்கத்தினரிடம் வீண் விரோதத்தை உருவாக்குவார். உடல்நலனில் அக்கறை தேவை. உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம்.
* நல்ல நாள்: பிப்.13,14,19,20,21,22,23,28, மார்ச் 1,2,3,4,8,9,12,13,14
* கவன நாள்: பிப்.24,25 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 2,8
* நிறம்: மஞ்சள், வெள்ளை
* பரிகாரம்:
* செவ்வாயன்று முருகன் கோயில் தரிசனம்
* சனியன்று பெருமாளுக்கு துளசி மாலை
* பிரதோஷத்தன்று விரதமிருந்து நந்தி வழிபாடு