பதிவு செய்த நாள்
12
பிப்
2019
01:02
மானாமதுரை:மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்-சோமநாதர் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக கோயில் முன் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 4 ந் தேதியிலிருந்து அனுக்ஞை மற்றும் கணபதி ஹோமத்துடன் பல்வேறு பூஜை நடந்தது. நேற்றுமுன்தினம் காலை முதல் 4 மற்றும் 5 ம் கால பூஜைகள் நடைபெற்றன, நேற்று காலை 6ம் கால யாகசாலை பூஜை மற்றும் 7:25 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர், முருகன்,வள்ளி-தெய்வானை,மற்றும் பல்வேறு சுவாமிகள் சன்னதி கோபுரங்கள் மற்றும் ராஜகோபுரங்கள்,விமானங்களுக்கு புனிதநீரை சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர். காலை 9:40 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.மாலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம், மாலை 6:00 மணிக்கு ஆனந்தவல்லி -சோமநாதர் திருக்கல்யாணம்,இரவு 8:30 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆனந்தவல்லி சோமநாதர் சுவாமி சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள், தொழிலதிபர்கள் நடராஜன், ஏ.ஆர்.பி., முருகேசன்,ராமையா, நாகராஜன் மற்றும் விழாக்குழுவினர், சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள், ஸ்தானீகர்கள் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.விழாவில் சீனியப்பா அன்கோ உரிமையாளர்கள் சுப்பிரமணியன்,ஜான் தினகரன்,சீனியப்பா டிம்பர் டிரேடிங் உரிமையாளர்கள் நடராஜன்.சுரஷே், ஆனந்தகிருஷ்ணன் அன் கோ உரிமையாளர்கள் ஆனந்தகிருஷ்ணன்,குணா(எ)குணசீலன்,வணங்காமுடி பிரிக்ஸ் உரிமையாளர்கள் திவான்ராஜ்,வணங்காமுடி,தொழிலதிபர் நமச்சிவாயம்,ஸ்தபதி சண்முகம்,யாகசாலை அமைப்பாளர் பஞ்சநாதன்,டியூகோ செராமிக்ஸ் உரிமையாளர்கள் கோட்டையன், சுரஷே், திருமலை, வி.ஆர்.வி. பைனான்ஸ் உரிமையாளர் ராஜா,நவீன் காஸ் உரிமையாளர் குணசேகரன்,பத்திர எழுத்தர்கள் வேல்முருகன்,தனபாலன், அண்ணா கோல்டு சமையல் எண்ணெய் உரிமையாளர் ரபீக்,ஈஸ்வர் மோட்டார் உரிமையாளர் சஞ்சய்காந்தி,கணஷே் ஸ்டுடியோ உரிமையாளர் சேகர்,பாபு ஸ்டுடியோ உரிமையாளர் சரவணன்,உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.